BUN TECH

BUN TECH

Categories

TECH (8) Trailers (8) Bollywood Trailers (4) Science தமிழ் (4) Finger-tip info (3) Hollywood Trailers (3) Cine Updates (2) Tamil Trailers (1)

LATEST

Search This Blog

Translate

Showing posts with label Science தமிழ். Show all posts
Showing posts with label Science தமிழ். Show all posts
March 31, 2018

நானோ தொழில்நுட்பம் (Nanotechnology) என்பது என்ன?

BUN TECH

இரும்பை பொன்னாக்கும் இரசவாத வித்தை என நாம் படித்திருப்போம். இந்த தனிமமாற்றம் (transmutation) வித்தையாக ஒரு சிலரால் பார்க்கப்பட்டாலும், பழைய கிரேக்கர், எகிப்தியர்கள், தமிழர்கள் இந்த முறையில் இருந்து மாறி, குறிப்பிட்ட உலோகங்கள் மேல் வேறொரு உலோகத்தைப் பூசுவதன் மூலம், செயற்கை முறையை அறிமுகப்படுத்தினார்கள்.



இந்த முறை அறிவியல் துறை உட்பட பலவற்றுக்கு பயன்படுகின்றன. ராக்கெட்டுக்கள் (thermal protection system (TPS) உட்பட பலவற்றை, உயர் வெப்ப நிலையில் இருந்து பாதுகாக்க, பல பொருட்கள் கலந்த பூச்சு முறை பயன்படுகிறது. விலை உயர்ந்த தங்க நகைகளை (covering) வாங்க முடியாத ஏழைகள் கூட இந்த பூச்சு முறையால் பயன்பெறுகிறார்கள். மேலே சொன்ன தனிமமாற்றம் முன்னர், சோதிடத்துடன் இணைந்து alchemy -இரசவாதம்- pseudoscience - என்று பெயரிலும் சிலர் பார்த்தார்கள். ஏனெனில் அன்று வாழ்ந்த மக்கள், இன்றும் கூட, உலகில் உள்ள மக்கள், கிரகங்களாலும், நட்சத்திரங்களாலும் கட்டுப்படுத்தப் படுகிறார்கள் என நம்பினார்கள், நம்புகிறார்கள்.

ஆனாலும் அறிவியல் முறையில் பார்த்தால், சில உலோகங்கள் இன்னொரு உலோகத்துடன் சேர்ந்து வேறொரு உலோகத்தை உருவாக்கும்.இது உலோகக் கலவை (மாழைக்கலவை- alloy) எனப்படுகிறது. உதாரணமாக பித்தளை (Brass = zinc + copper); வெண்கலம் (Bronze= copper+tin) போன்றவற்றை சொல்லலாம்.

உலகில் உள்ள உணவு,உடை,பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. இந்த அணுக்களை நம் கண்ணால் மட்டுமல்ல, குறைந்த அளவு மைக்ரொஸ்கோப் களால் கூடக் காண முடியாத சிறியவை. இவற்றை அறிவியல், scanning tunneling microscope (STM), atomic force microscope (AFM) போன்ற கருவிகள் மூலம் கண்டறிய முற்பட்டதன் விளைவு நானோ அறிவியல் தொழில்நுட்பம் உருவானது. இந்த தொழில் நுட்பத்தை அறியாமலேயே, நம்மவர்கள் முக்கியமாக, தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கோயில் கோபுரங்கள், தங்க,வெள்ளி நிறக் கலவைகள் மூலம் அழகு சாதனங்கள் என ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் வெள்ளையன் சொல்லாமல் தமிழன் சொன்னால் யார் தலையிலும், நம்மவர் தலைக்குள்ளும் ஏறாதே!.

ஒன்றும் அறியாத படிப்பறிவில்லாதவர்கள் என நம்மவர்களை, நம்மவர்களே ஒதுக்கி வைத்து விட்டாலும் கூட, நம் முன்னோர்கள், வானியல், மருத்துவம், கட்டிடக்கலை போன்றவற்றில் அரிய சாதனைகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து விட்டாலும், அவர்களால் அவற்றின் தொழில் நுட்பத்தை விளக்க முடியவில்லை. சமீப கால அறிவியலால் கண்டறியப்பட்ட, தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சியை, நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து விட்டனர்.(திருமந்திரம்)

இந்த வகையில் மூலகத்தையும், அணுவையும் (molecule,atom) ஏற்ப கையாள்வதன் மூலம் சில பொருட்களை, சக்தியை உருவாக்க முடியும் எனக் கண்டார்கள். இது Nano Technology என ஆரம்பமானது (நானோ என்றால் கிரேக்க மொழியில் குள்ளன்(dwarf) என்று பொருள்). நானோ அளவை கண்ணால் மட்டுமல்ல, குறைந்த அளவு மைக்ரொஸ்கோப்களால் கூடக் காண முடியாத சிறிய அளவு என்பதால், அளக்கும் முறை nanoscale எனப்படுகிறது. ஒரு அங்குலம் என்பது நானோ அளவில் 25,400,000 nanometers, ஒரு பேப்பர்(paper) 100,000 nanometers தடிப்பானது, ஒரு நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் one-billionth இல் ஒரு பகுதி ஆகும். இது (nanometer- nm ) நம்மால் எண்ணிப் பார்க்க முடியாத சிறிய அளவாகும்.

அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனப்படும் இந்த நானோ முறைக்கு நோபல் பரிசு பெற்ற Physicist "Richard Feynman" 1959 டிசம்பர் 29 இல், கலிபோர்னிய இன்ஸ்டிடுயுட் ஆஃப் டெக்னொலஜியில் (California Institute of Technology (CalTech), "There`s Plenty of Room at the Bottom" என்ற உரையின் மூலம் வித்திட்டார். இருப்பினும் நானோ தொழில் நுட்பத்தை, (nanotechnology) முதலில் 1974 இல் அறிமுகப் படுத்தியவர் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழக (Tokyo Science University) பேராசிரியர் நொரியோ தனிகுச்சி (Norio Taniguchi) என்பவராவர். தற்போது இந்த நனோ டெக்னொலொஜி Nano-Sim, Chips,Nanowires, Carbon Nanotubes, Transistors, in medicine, Solar cells, இப்படி பலவற்றில் பாவிக்க முடிகிறது. சமீபத்தில் வந்த iphone5 இல் நானோ சிம் காட் போட முடியும்.

இந்த முறையினால், நிறை குறைவான, அதிக திறன் கொண்ட, ஒளித்தாக்குதல் குறைந்ததும், பெரிய பொருட்களில் உள்ள வேதிப்பொருள் தாக்கத்தை விட, கூடிய தாக்கத்தை( greater chemical reactivity) உடையனவாகவும், மிகக் குறைந்த மின்னிலும் வேலை செய்யக் கூடியதாகவும் உருவாக்க முடிகிறது.

இரு விரல்களை அழுத்துவதால் கிடைக்கும் மின்னில் இருந்து, கைத்தொலைபேசி சார்ச், சில நிமிட சூரிய ஒளியில் இருந்து கணினி இயக்கம் (கால்குலேட்டர் போல்), MRI போன்ற மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை இப்படி பல, மிகச் சிறியனவாக இருப்பதுடன், குறைந்த அளவு மின்சாரத்திலும் இயங்கப் போகின்றன.சுற்றுப்புற சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.

மேற்சொன்ன Carbon Nanotubesகளை கணினி திரையில் பாவிப்பதால் Color, Contrast, Display சிறப்பாக இயங்குவதுடன், மெல்லிய எடை குறைந்த திரைகளை உருவாக்க முடிகிறது.

மொபைல்,லாப்டாப் பாட்டரிகளுக்குப் பாவிப்பதால், மிக விரைவாக சார்ச் செய்ய முடிவதுடன், நீண்ட நேரம் பாவிக்கவும், உழைக்கவும் கூடும். Titanium dioxide (TiO2) ,Zinc oxide (ZnO) போன்றவற்றை அழகுசாதனப் பொருட்களுக்கு பாவிப்பதால், ஊதா ஒளி, Ultraviolet light இதனால் உடலுக்கு ஏற்படும் கேடுகளில் இருந்து காப்பாற்ற நானொ பொருட்களான TiO2 and ZnO2 களை மாற்றி அமைத்து உருவாக்க உதவுகிறது.

வானொலிப் பெட்டிகளில் பாவிக்கப்பட்ட PNP,NPN Transistorsகளை எண்ணிப் பார்த்து விட்டு, 1971 இல் உருவான intel 4004இல், 2300 ட்ரன்சிஸ்டர்களை உபயோகித்ததை அதிசயத்துடன் பார்த்த தொழில்நுட்பம், இன்று 20 பில்லியன் ட்ரன்சிஸ்டர்களை (Six-core zEC12) CPU வில் பாவிப்பதை கண்டு அதிசயிக்கவில்லை. ஏனெனில் இதைவிட இன்னும் நானொ தொழில்நுட்பம் முன்னேறி வருவதுதான்.

சுருக்கமாக சொன்னால்,ஒரு தனிமத்தின்(element) மூலக்கூற்றையும், அணுவையும் (molecule+atom) முறையாகக் கையாள்வதன் மூலம் நானொ தொழில்நுட்பம் உருவாகிறது என்று சொல்லலாம். ஒரு அறையினுள் அடக்கப்பட்ட கணினி இன்று கையடக்க கணினியாக ஆகி விட்டது. இதே போல மிகப்பெரிய பொருட்களை கையாள்வதை விட, சிறிய அளவில் உள்ளவற்றை கொண்டு செயலாக்குவது சிறந்தது, உயர்ந்தது, பலம் மிக்கது என்பதே இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாகும்.


நானோ தொழில்நுட்பம் (Nanotechnology) அல்லது மீநுண் தொழில்நுட்பம் என்பது அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் பொருள்களைக் கையாளும் தொழிற்கலை ஆகும். பரவலாக இன்று அறியப்படும் தொடக்கநிலை மீநுண் தொழில்நுட்பம்[1][2] சில குறிப்பிட்ட தொழில்நுட்ப இலக்குகளை ஒட்டியது. இதன்படி, பெரிய அளவிலான பொருள்களையோ கருவிகளையோ செய்ய, துல்லியமாக அணு அளவிலும், மூலக்கூறு அளவிலும் பொருள்களைக் கையாண்டு செய்யும் முறையே மீநுண் தொழில்நுட்பம் ஆகும். இது இப்போது மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்பம் எனப்படுகிறது. பிறகு, மிகவும் பொதுவான விளக்கம் ஒன்றை அமெரிக்கத் தேசிய மீநுண் தொழில்நுட்ப முன்முயற்சியகம் தந்தது. இதன்படி, மீநுண் தொழில்நுட்பம் என்பது குறைந்தது ஒரு பருமானத்தில் 1 முதல் 100 நானோமீட்டர்களில் ஒன்றைக் கையாளும் திறம் கொண்ட நுட்பமாக வரையறுக்கப்பட்டது. இந்த வரையறையின்படி பொருளின் பரும அளவு மிகக்குறைவாக இருப்பதால் குவைய இயக்கவியல் (குவாண்டம் இயக்கவியல்) விளைவுகள் மிகவும் வினைப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கும். எனவே வரையறை குறிப்பிட்ட தொழில்நுட்ப இலக்கில் இருந்து பெயர்ந்து ஆய்வு வகைக்கு மாறிவிட்ட்தைக் கண்ணுறலாம். இதன்படி, இன்று இது குறிப்பிட்ட பரும அளவுக்குக் கீழே அமைந்த பொருளின் சிறப்பு இயல்புகளை விவரிக்கும் அனைத்து ஆராய்ச்சிகளையும் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்குகிறது.எனவே இது இப்போது மீநுண் தொழில்நுட்பங்கள் அல்லது மீநுண்ணளவுத் தொழில்நுட்பங்கள் என பன்மையில் அழைக்கப்படுகிறது. இதன் பொதுப்பான்மையாக அளவு மட்டுமே கருதப்படுகிறது. இதற்குப் பல பயன்பாடுகள் தொழில்துறையிலும் படைத்துறையிலும் வாய்த்துள்ளதால், உலக வல்லரசுகள் பல பில்லியன் வெள்ளிகள் (தாலர்கள்) செலவிட்டு வருகின்றன. அமெரிக்கா தன் தேசிய மீநுண் தொழிலுட்ப முன்முயற்சியகத்தின் வழி 3.7 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளை முதலீடு செய்துள்ளது; ஐரோப்பிய ஒன்றியம் 1.2 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளையும் நிப்பான் எனும் யப்பான் 750 மில்லியன் அமெரிக்க வெள்ளிகளையும் முதலீடு செய்துள்ளன.[3]
பரு அளவால் வரையறுக்கப்படும் மீநுண் தொழில்நுட்பம், அறிவியலில் மேற்பரப்பு அறிவியல், [[கரிம வேதியியல், [[மூலக்கூற்று உயிரியல், குறைகடத்தி இயற்பியல், நுண்புனைவியல், மூலக்கூற்றுப் பொறியியல் போன்ற பல புலங்களை உள்ளடக்குகிறது.[4] எனவே இத்துறை சார்ந்த ஆராய்ச்சியும் பயன்பாடுகளும் பல்திறத்தனவாக, மரபியலான குறைகடத்திக் கருவி இயற்பியலில் இருந்து முற்றிலும் புதிய அணுகுமுறைகள் வாய்ந்த மூலக்கூற்றுமுறைத் தன்பூட்டுதல் முதல் மீநுண் பொருள்களை உருவாக்கல், நுண் தொழில்நுட்பம், மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்பம் என, நேரடி அணுவியல் மட்டக் கட்டுபாடுள்ள புலங்கள் அனைத்திலும் பரந்து விரிந்தமைகிறது. அறிவியலாளர்கள் அன்மையில் மீநுண் தொழில்நுட்பத்தின் தொடர்ந்த எதிர்கால பின்விளைவுகள் பற்ரி விவாதித்து வருகின்றனர். இது மீநுண் மருத்துவம், மிநுண் மின்னணுவியல், உயிரிப்பொருள்வழி ஆற்றலாக்கம், நுகர்பொருட்கள் போன்ற அகன்ற விரிவான மீநுண் தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான பல புதிய பொருள்களையும் கருவிகளையும் உருவாக்க வல்லதாகும். இன்னொருவகையில் பார்த்தால், புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தும் அத்தனைச் சிக்கல்களையும் மீநுண் தொழில்நுட்பமும் எதிர்கொள்கிறது. இது மீநுண் நச்சியல் விளைவுகளையும் மீநுண் பொருள்களால் ஆகிய சுற்றுச்சூழல் தாக்கங்களையும் கொண்டுள்ளது.[5] இதன் தாக்கம் உலகப்பொருளியல் மீதும் அமைவதோடு பல அழிவுநாள் வரம்புநிலைகளையும் உருவாக்க வல்லதாக உள்ளது. இந்த அக்கறைகள், மீநுண் தொழில்நுட்பத்தைப் பரிந்துரைப்போருக்கும் உலக அரசுகளுக்கும் இடையில் சிறப்பு மீநுண் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை உருவாக்குதல் தேவையா எனும் விவாதத்தைக் கிளப்பிவருகின்றன.

தோற்றம்[தொகு]

மீநுண் தொழில்நுட்பத்துக்கான எண்ணக்கரு விதைந்த விவாதம் 1959 இல் பெயர்பெற்ற இயற்பியலாளரான இரிச்சர்டு பீய்ன்மனால் அவரது There's Plenty of Room at the Bottom எனும் உரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் இவர் அணுக்களை நேரடியாகக் கட்டுபடுத்தி உருவாக்கும் பொருள்தொகுப்பின் வாய்ப்புகள் பற்றி விவரிக்கிறார். மீநுண் தொழில்நுட்பம் எனும் சொல்லை முதலில் 1974 இல் நோரியோ தானிகுச்சி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இச்சொல் மிகவும் பரவலாக வழங்கப்படவில்லை.

பெயின்மன் கருத்துகளால் கவரப்பட்டு, கே. எரிக் டிரெக்சிலர் என்பார் தான் 1986 ஆம் ஆண்டு வெளியிட்ட Engines of Creation: The Coming Era of Nanotechnology எனும் நூலில் மீநுண் தொழில்நுட்பம் எனும் சொல்லைப் பயன்படுத்தினார். இதில் மீநுண் அளவு புனைவி எனும் எண்ணக்கருவை முன்மொழிந்தார். இது அணுக் கட்டுபாட்டின் வழி சிக்கலான கட்டமைப்புடைய தன்னையே புனைவதோடு பிறவற்றையும் புனையும் ஆற்றல் கொண்டதாகும். இவர் 1986 இல் முன்னோக்கு நிறுவனம் அமைப்பை இனையாக நிறுவினார்.இதன்வழி மக்களின் விழிப்புணர்வை மீநுண் தொழில்நுட்பத்தின்பால் ஈர்த்து அத்தொழில்நுட்பத்தின் கருத்துப்படிமங்களையும் விளைவுகளையும் புரிந்துகொள்ள வழிவகுத்தார்.
இதனால், 1980 களில் இவரது கோட்பாட்டுப் பணிகளாலும் பொதுப்பணிகளாலும் மீநுண் தொழில்நுட்பம் தனிப்புலமாக எழுச்சிகண்டு வளரலானது. பல நுண்ணோக்கான உயர்நிலைச் செய்முறைகள் மேற்கோள்ளப்பட்டன. பொருண்மத்தின் அணுக்கட்டுபாட்டின்பால் ஆய்வாளர்களின் கவனத்தைக் குவித்தது. 1980 களில் ஏற்பாட்ட இரு புதுமைக் கண்டுபிடிப்புகள் இத்துறைyai உரமூட்டி வளர்த்தன.
முதலாவது கண்டுபிடிப்பு, ஊடுருவும் அலகீட்டு நுண்ணோக்கி 1981இல் புதிதாகப் புனைந்தமையாகும். இது வரலாறுகாணாத வகையில் தனித்தனி அணுக்களையும் அவற்றுக்கிடையில் அமைந்த பிணைப்பையும் தெளிவாக்க் காண வழிவகுத்தது. இதனால் 1989 ஆண்டளவுக்குள் தனி அணுக்களை வெற்றியோடு கையாள இந்நுண்ணோக்கியை பயன்படுத்த முடிந்தது. இதை உருவாக்கியதற்காக ஐ பி எம் சூரிச் ஆய்வகத்தைச் சேர்ந்த ஜெர்டு பின்னிகுவும் என்றிச் உரோகிரரும் 1986 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றனர்.[6][7] அதே ஆண்டில் பின்னிகுவும், குவேட்டும் கெர்பெரும் இதையொத்த அணுவிசை நுண்ணோக்கியைப் புத்திதாக புனைந்தனர்.

பக்மினிசுட்டர் புல்லெரீன் C60. இது நெளிகட்டு பந்து எனவும் வழங்கும். இது கரிமத் தனிமக் கட்டமைப்புகளைச் சார்ந்த புல்லெரீன்கள் எனும் வகைசார் உறுப்பினராகும். புல்லெரீன் குடும்ப உறுப்பினர்கள் மீநுண் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் கீழ்வரும் பெரும்பாடப் பகுதியாகும்.
இரண்டாவது கண்டுபிடிப்பு, 1985 இல் நெளிபந்துகள் எனப்படும் பெருங்கரிம மூலக்கூறுகளாகிய புல்லெரீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமையாகும். இக்கண்டுபிடிப்புக்காக ஆரி குரோட்டொ, இரிச்சர்டு சுமால்லேஇராபர்ட் கர்ல் ஆகிய மூவரும் 1996 ஆம் ஆண்டின் வேதியியல் நோபல் பரிசைப் பெற்றனர்.[8][9] C60 இவை முதலில் மீநுண் தொழில்நுட்பத்துக்குள் அடக்கப்படவில்லை ஆனால், பின்னர் கரிம மீநுண் குழல்கள் அல்லது நெளிகுழல்கள் எனப்படும் கிராபீன் குழல்களின் கண்டுபிடிப்புக்குப் பின்னரே மீநுண் தொழில்நுட்ப வரையறைக்குள் வந்தது. இவற்றின். பயன்பாடுகள் மீநுண்ணளவு மின்னணுவியலிலும் மின்னணுவியல் கருவிகளிலும் பேரளவாக அமையும் வாய்ப்புகளும் புலனாகின.
இப்புலம் 2000 களின் தொடக்கத்தில், வளர்நிலை அறிவியல், அரசியல், வணிகவியல் கவனத்துக்கு ஆட்படலானது. பல எதிர்ப்புகளையும் தொடர்ந்த முண்ணேற்ரத்தையும் சந்தித்தது. அரசு கழகத்தின் மீநுண் தொழில்நுட்ப அறிக்கைக்குப் பிறகு, வரையறைகள் குறித்தும் இத்தொழில்நுட்பத்தின் பின்விளைவுகள் குறித்தும் கருத்து மோதல்கள் தோன்றின.[10]மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்ப விரும்பிகளால் விவரிக்கப்படும் பயன்பாடுகள் குறித்து பல அறைகூவல்கள் எழுந்தன. இது பொதுமக்களிடையே பெருவிவாத்த்தைக் கிளப்பியது. இவ்விவாத்த்தில் 2001 இலும் 2003 இலும் டிரெக்சிலரும் சுமால்லேவும் ஈடுபட்டனர்.[11] இதற்கிடையில் மீநுண்ணளவு தொழில்நுட்ப முன்னேற்றங்களால் உருவாகிய பொருள்கள் வணிகவீயலாக வெற்ரிகாணத் தொடங்கிவிட்டன. இப்பொருள்கள் மீநுண்பொருள்களின் பேரளவு பயன்பாட்டால் உருவாகியவையே தவிர இவற்றில் பொருண்மத்தின் அணுமட்டக் கட்டுபாடேதும் கைக்கொள்ளப்படவில்லை. எடுத்துகாட்டுகளாக்க் குச்சுயிரித் தொற்றெதிர்ப்புள்ல வெள்ளி மீநுண்துகள்களைப் பயன்படுத்திய சூரியத் தடுப்புத்திரை அமைந்த வெள்ளி மீநுண்தட்டமைவையும் மீநுண் துகள்களால் ஆகியஒளி ஊடுருவும் சூரியத் தடுப்புத்திரையையும் அனலக மீநுண் துகள்களைப் பயன்படுத்தி வலுவூட்டிய கரிமநாரையும் துகிலியலில் உருவாகிய கறையெதிர்ப்பு மீநுண் குழல்களையும் கூறலாம்.[12][13]
இந்தத் தொழில்நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடைய துகள்களை (துணிக்கைகளை) ஒன்று சேர்க்கிறது. எடுத்துகாட்டாக, காந்தவியல்மின்னியல் அல்லது ஒளியியல் பண்புகள் வாய்ந்த துகள்களைக் குறிப்பிடலாம். மீநுண் துகள்களைத் தொகுக்கும்போது அவை தமது பொறியியல்வலிமையைக் கூட்டுகின்றன. எடுத்துக்காட்டாக மரபான பலபடிவங்கள் மீநுண் தொழில்நுட்பத்தால் வலிவூட்டப்படலாம். இவற்றை நாம் மாழைகளுக்கு (உலோகங்களிற்குப்) பதிலாகப் பயன்படுத்தலாம். இதன்காரணமாக எடையற்ற வலிவூட்டிய உறுதியான அமைப்புகள் கிடைக்கின்றன.
உலக அரசுகள், குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மீநுண் தொழில்நுட்ப அறிவியல் ஆராய்ச்சியை வளர்த்தெடுக்க கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்தன. அமெரிக்கா மீநுண் தொழில்நுட்பத்துக்கான வரையறையை உருவாக்கி, மீநுண் தொழில்நுட்ப முயல்வகத்தைத் தோற்றுவித்தது. இதன்வழி இத்தொழில்நுட்பத்துக்கான நிதியைப் பகிர்ந்தளித்த்து. ஐரோப்பா, ஐரோப்பியா ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடிப்படைத் திட்டங்களால் மீநுண் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தது.
இதில் 2000 இன் இடைப்பகுதியில் சீரிய அறிவியல் கவனம் செழிக்கத் தொடங்கியது. மீநுண் தொழில்நுட்ப நெடுஞ்சாலையைத் திட்டமிடும் பல புதிய திட்டங்கள் எழுச்சி கண்டன[14][15] இது அணுவியல் நிலையில் பொருண்மத்தைக் துல்லியமாகக் கட்டுபடுத்துவதில் மையங்கொண்டு நடப்பு, எதிர்கால வளவாய்ப்புகளையும் இலக்குகளையும் பயன்பாடுகளையும் விவாதத்துக்கு உட்படுத்தியது.
இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இது அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனக்கருதப்படுவதால் ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன.

அடிப்படை கருத்துப்படிமங்கள்[தொகு]

மீநுண் தொழில்நுட்பம் என்பது மூலக்கூற்று உலகின் செயல்பாட்டு அமைப்புகள் சார்ந்த பொறியியலாகும். இது நடப்பு ஆய்வுகளையும் மேலும் உயராய்வுக் கருத்துப்படிமங்களையும் உள்ளடக்குகிறது. அதன் உண்மைப் பொருளில், மீநுண் தொழில்நுட்பம் கீழிருந்து மேலாகப் பொருள்களைக் கட்டியமைக்கும் விரிவாக்கத் திறமையைச் சுட்டுகிறது. இன்று உருவாகியுள்ள நுட்பங்களும் கருவிகளும் இத்தகைய முழுமை வாய்ந்த உயர்செயல்திறப் பொருள்களைச் செய்ய உதவுகின்றன.

நானோ தொழில்நுட்பக் கட்டமைப்பு[தொகு]

நானோ தொழினுட்பவியலில் பயன்படுத்தப்படும் பிரதான மூலகம் காபனாகும்கடுங்கரிவைரம் என்பன காபனின் பிறதிருப்பங்களாகும். புளோரின்செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட காபனின் மூன்றாவது பிறதிருப்பமாகும். காபன் பக்கி பந்து, காபன் நானோ குழாய், காபன் நானோ ஊதுகுழாய் என்பன புளோரின் மூலம் உற்பத்தியாக்கப்பட்ட சில பொருட்களாகும்.
March 26, 2018

யார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ! குத்துச்சண்டை வீரர் to பிரதமர்...

BUN TECH

யார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ! குத்துச்சண்டை வீரர் to பிரதமர்...

ஜஸ்டின் துரூடோ
நா.உ
Justin Trudeau 2014-1.jpg
2014 இல் ட்ரூடோ
23ஆவது கனடாவின் பிரதமர்
பதவியேற்பு
நவம்பர் 4, 2015 [1]
அரசர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர்டேவிட் ஜோன்ஸ்டன்
முன்னவர்இசுட்டீவன் கார்ப்பர்
கனடா லிபரல் கட்சி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஏப்ரல் 14, 2013
முன்னவர்பொப் ரேய் (இடைக்கால)
பாப்பினோ
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
அக்டோபர் 14, 2008
முன்னவர்விவியன் பார்பொட்
தனிநபர் தகவல்
பிறப்புஜஸ்டின் பியேர் ஜேம்சு துரூடோ
திசம்பர் 25, 1971 (அகவை 46)
ஒட்டாவாஒன்ராறியோகனடா
அரசியல் கட்சிலிபரல்
வாழ்க்கை துணைவர்(கள்)சோஃபி கிரேகோர் (தி. 2005–தற்காலம்)
பிள்ளைகள்சேவியர்
ஏட்ரியன்
எலா-கிரேசு
பெற்றோர்பியேர் துரூடோ
மார்கரெட் சின்கிளையர்
இருப்பிடம்மொண்ட்ரியால்
படித்த கல்வி நிறுவனங்கள்மக்கில் பல்கலைக்கழகம்
பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகம்
தொழில்ஆசிரியர்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
இணையம்justin.ca
னடா... உலகின் வளமையான செழிப்பான நாடுகளுள் ஒன்று. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான கனடாவின் மக்கள் தொகை நான்கு கோடி. ஒட்டோவா இதன் தலைநகரம். வான் கூவர், டொரோன்டோ, மான்ட்ரீயல் போன்ற நகரங்களும் புகழ்பெற்றவை. கனடா என்றதும் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வரும்... அது நயாகரா அருவி. கனடா நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலகம் முழுக்கச் சென்று தொழில்முனைவோர்களாகும் சீக்கியர்கள் லட்சக்கணக்கில் இங்கு வசிக்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இந்நாடு அடைக்கலம் கொடுத்துள்ளது. ஆதரவற்றவர்களுக்குத் தாராளமாக இடம் கொடுக்கும் கருணைமிக்க நாடு. மனித உரிமை மீறினால் உடனடியாக தண்டனை அளிக்கப்படும் நாடு. இன, மொழி போன்ற பேதங்களுக்கு இங்கே இடமில்லை.
சப்பாத்தி உருட்டும் ஜஸ்டின் குடும்பம்
Photo Courtesy : Mathrubhumi
ஜஸ்டினுக்கு முன்னர் வேறு எந்த கனடா பிரதமரும் இந்தியாவில் இவ்வளவு பாப்புலர் ஆனதில்லை. சொல்லப் போனால் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்தபோது, வழக்கத்துக்கு மாறாக பிரதமர் மோடி விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். `மை ஃப்ரெண்ட்’ என்று கமல் பாணியில் கட்டியணைத்தார். ஆனால், ஜஸ்டினை வரவேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் கூட போகவில்லை. மோடியுடன் சேர்ந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளியாகாத நிலையிலும் ஜஸ்டின் மட்டுமல்லாமல் அவரின் குடும்பமே இந்தியா முழுவதும் பாப்புலராகியிருக்கிறது.
பொங்கல் பண்டிகையின்போது பாரம்பர்ய வேஷ்டி- சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய தருணத்தில் தமிழர்களின் மனதில் இடம் பிடித்த ஜஸ்டின், 8 நாள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். இங்கே ஜஸ்டின் குடும்பமே பாரம்பர்ய இந்திய  உடைகளில் வலம் வருவதுதான் ஹைலைட்!
ஜஸ்டினின் பின்னணியை ஆராய்ந்தால் சுவாரஸ்யம் நிறைந்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் குடும்பமே அரசியல் குடும்பம்தான். ஒட்டாவைச் சேர்ந்த இவரின் தந்தை பிர்ரே எலியட் ட்ரூடோ, கனடாவின் முன்னாள் பிரதமர். 1971- ம் ஆண்டு பிறந்த ஜஸ்டின், பட்டம் பெற்ற பின், ஆசிரியராகப் பணி புரிந்தார். 2013-ம் ஆண்டு கனடா லிபரல் கட்சியின் தலைவராகி, 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். கனடாவின் இரண்டாவது இளம் பிரதமர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பிரதமர் பதவி ஏற்கும் போது இவருக்கு வயது 43. முன்னதாக, ஜோ கிளார்க் 39 வயதில் கனடா நாட்டு பிரதமர் ஆகியிருந்தார்.
குத்துச்சண்டை வீரராக ஜஸ்டின்
குழந்தைமுகத்துடன் காட்சியளிக்கும் ஜஸ்டின் எரிமலை போன்றவர். இளைஞராக இருந்தபோது மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரராக வலம் வந்தவர். களத்தில் பலமுறை எதிரிகளின் முகத்தை உடைத்துள்ளார். ஆனாலும், கருணையுள்ளம் கொண்டவர். பல அறக்கட்டளைகள், `நீங்கள் களம் இறங்கினால், ஏராளமான நிதி திரளும். எங்களுக்காக ஒரு போட்டியில் பங்கேற்க வேண்டும்’ என்று அன்புடன் கோரிக்கை வைக்கும். தட்டாமல் ஜஸ்டினும் போட்டிகளில் பங்கேற்று நிதி திரட்ட உதவுவார். 
டாட்டூ குத்திக் கொள்வதிலும் அவருக்கு அலாதி பிரியம் உண்டு. உடலில் இரண்டு டாட்டூ குத்தியுள்ளார். ஜஸ்டின் மனைவி ஷோஃபி, இவரின் சகோதரர் மிக்கேலின் கிளாஸ்மேட். அந்த வகையில், ஜஸ்டின் வீட்டுக்கு வந்து போய் கொண்டிருந்தபோது காதல் 'க்ளிக்' ஆகி விட்டது. 2004-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு யெல்லா க்ரேஸ் மார்க்கரெட், ஜேவியர் ஜேம்ஸ், ஹெர்டினின் என்ற மூன்று குழந்தைகள். 
கனடாவில் ஏராளமான இந்தியர்கள் வசிப்பதால் இந்தியா மீது ஜஸ்டினுக்கு அவரை அறியாமலேயே ஒரு காதல். நீண்ட நாள்களாக இந்தியா வருவதில் முனைப்பு காட்டிக்கொண்டிருந்தார். அதற்கான காலம் கணிந்து, குடும்பத்தோடு இந்தியா விசிட் அடித்துள்ளார். இந்தியாவில் கால் பதித்தவுடன் தாஜ்மகாலை குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்தனர். அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் ஜஸ்டின் சிவப்பு நிற குர்தா அணிந்தும், ஷோஃபி ஐவரி வர்ண சுரிதார் அணிந்தவாறும், குழந்தைகளுடன் ராட்டை சுற்றிய புகைப்படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியாகி மனதைக் கொள்ளைகொண்டது.
இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின்
பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்ற ஜஸ்டின் குடும்பத்துக்குப் பொற்கோவிலில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சீக்கிய மக்களின் அன்பில் திளைத்த ஜஸ்டீன் குடும்பம், பொற்கோவிலின் மிகப் பெரிய லங்கரைச் சுற்றிப் பார்த்து வியந்தது. லங்கர் செயல்படும் விதத்தையும் ஜஸ்டின் தம்பதியர் கேட்டு அறிந்தனர். லங்கரின் சமையல் அறையில் சப்பாத்தி உருட்டியும் மகிழ்ந்தனர். பாரம்பர்ய பஞ்சாபி உடையில் ஜஸ்டின் சோஃபி தம்பதி சப்பாத்தி உருட்டும் புகைப்படங்கள் நேற்றைய ஹைலைட்.  
March 24, 2018

கடவுள் குறித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது என்ன?

BUN TECH


ஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளைப் பற்றி சொன்னது என்ன? விஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா? ஏலியன்களின் இருப்பு பற்றிய ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள் புகழ்பெற்றவை.




படத்தின் காப்புரிமைAFP



பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76-ஆவது வயதில் மரணமடைந்தார். பிரிட்டனை சேர்ந்த இவர், 'கருந்துளை மற்றும் சார்பியல்' சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவர்.
விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்ய கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருந்தார் அவர். கடவுளின் இருப்பு, பூமியில் வாழும் மனிதர்களின் முடிவு மற்றும் வேற்று கிரக மனிதர்களின் (ஏலியன்களின்) இருப்பு போன்ற முக்கியமான விடயங்களின் மீது விஞ்ஞானத்தின் கோணத்தில் இருந்து அவர்கள் சொன்ன கருத்துகள் வித்தியாசமானவை.
இதுபோன்ற கடுமையான கருத்துகளுக்காக மத அமைப்புகளிலிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார் ஹாக்கிங்.






ஸ்டீஃபன் ஹாக்கிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'தி கிராண்ட் டிசைன்' என்ற புத்தகத்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளின் இருப்பை நிராகரித்தார்.

கடவுள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து என்ன?

ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடிப்பதைப்பற்றி பேசும்போது, நமது சூரிய மண்டலத்தின் சமன்பாடு மற்றும் கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.
நமது சூரியனை சுற்றாமல் வேறொரு சூரியனை சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய கிரகம் 1992ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு உதாரணத்துடன் புதிய கண்டுபிடிப்பு பற்றி ஹாக்கிங் கூறியது இதுதான்: "ஒரு சூரியன், பூமி மற்றும் இந்த இரண்டிற்கும் இடையிலான தூரம், சூரியனின் நிறை என நமது சூரிய மண்டலத்தின் வானியல் கூட்டமைப்பு தற்செயலானது என்பதையே இந்த கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. மனிதர்களை மகிழ்விப்பதற்காக பூமி கிரகம் மிகவும் கவனமாக இருந்ததை நம்புவதற்கு தேவையான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை."






ஸ்டீஃபன் ஹாக்கிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரபஞ்சம் உருவாவதற்கு காரணம் ஈர்ப்புவிசை விதியே என்று அவர் திடமாக தெரிவித்தார்.
ஹாக்கிங் கூறுகிறார், "ஈர்ப்பு விதிகளின் காரணமாக பிரபஞ்சம் சுயமாகவே பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை தொடங்கலாம். நமது இருப்புக்கும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பொறுப்பு திடீரென்று நிகழும் வானியல் நிகழ்வுகள்தான், இதற்கு கடவுளின் அவசியம் தேவையில்லை."
ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இந்த கருத்துக்கு கிறித்துவ மத குருக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

ஹாக்கிங் ஏலியன்கள் பற்றி சொன்னது என்ன?

பிரபஞ்சத்தின் வேறு கிரகங்களில் ஏலியன்கள் இருப்பதாக கூறிய ஸ்டீபன் ஹாக்கிங், அதுபற்றி எச்சரிக்கையும் விடுத்தார்.






ஸ்டீஃபன் ஹாக்கிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'பிரபஞ்சத்தில் வாழ்வு' தனது புகழ்பெற்ற உரையில், மனிதர்களும், ஏலியன்களும் எதிர்காலத்தில் சந்திப்பார்களா என்பது பற்றிய தனது கருத்தை ஹாக்கிங் கூறியிருந்தார்.
இந்த மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி கூறுகிறார், "பூமியில் மனிதர்கள் உருவான காலம் நேரம் சரி என்றால், பிரபஞ்சத்தில் பூமி போன்ற வேறு பல நட்சத்திரங்கள் இருக்க வேண்டும், அவற்றில் பல பூமி உருவாவதற்கு ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கும்."
"அப்போது, விண்மண்டலத்தில் உயிரியல் வாழ்வு ஏன் நமக்கு புலப்படவில்லை? வேற்று கிரகங்களில் வசிக்கும் யாரும் ஏன் இதுவரை பூமிக்கு வரவில்லை, பூமியை கைப்பற்ற முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை? பறக்கும் தட்டுகளில் (Unidentified flying object, UFO) களில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக என்னால் நம்பமுடியவில்லை. பூமி, வேற்று கிரகவாசிகளுக்கும் முற்றிலும் திறந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன், இது அநேகமாக நமக்கு நன்மையளிக்கூடியதாக இருக்காது" என்று அவர் தெரிவித்தார்.






ஸ்டீஃபன் ஹாக்கிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"பிரபஞ்சத்தில் உயிரினங்களின் இருப்பை ஆராய்வதற்காக, "சேடி" (search for extra-terrestrial intelligence (SETI)) என்ற திட்டம் முதலில் செயல்பட்டது. இதன்படி, ஏலியன்களிடம் இருந்து செய்திகளை பெறுவதற்கு வசதியாக ரேடியோ அலைகள் ஸ்கேன் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தை நாம் முன்னெடுத்து சென்றிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பணத் தட்டுப்பாட்டின் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது."
"ஆனால், இந்த முறையில் பெறும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும், அறிவியலில் இன்னும் சற்று முன்னேற்றம் அடையும்வரை காத்திருக்க வேண்டும், தற்போது இருக்கும் நிலையில் நாம் ஏலியன்களை சந்திப்பது என்பது, அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் மற்றும் கொலம்பஸ் இடையிலான சந்திப்பின் நவீன வடிவமாக இருக்கும். கொலம்பஸை சந்தித்த செவ்விந்தியர்களுக்கு நன்மை எதுவும் ஏற்பட்டதாக எனக்குக் தோன்றவில்லை" என்று அவர் தெரிவித்தார்.






கடவுள் குறித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது என்ன?படத்தின் காப்புரிமைHANDOUT/GETTY IMAGES

மனிதர்களிடம் இருப்பது வெறும் 100 ஆண்டுகளே

ஸ்டீஃபன் ஹாக்கிங் பூமியில் மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றி ஒரு ஆச்சரியமான விடயத்தை அறிவித்தார்.
"மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன், மனிதகுலத்தை காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும்" என்று ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறினார்.
March 24, 2018

நம் அந்தரங்க தகவல்களை ஃபேஸ்புக்கில் காப்பது எப்படி?

BUN TECH

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா?

இந்த நூற்றாண்டு தரவுகளுக்கான (Data) நூற்றாண்டு. அதுவும் ஃபேஸ்புக்கிற்கு `தரவு` எண்ணெய் போன்றது. எப்படி எண்ணெய் வளம் பல நாடுகளுக்கு செல்வத்தை கொண்டு வந்ததோ, அதுபோல `தரவு`தான் இப்போது நிறுவனங்களுக்கு செல்வத்தை கொண்டு வருகிறது.



படத்தின் காப்புர

அமெரிக்க தேர்தல் முதல் இந்திய தேர்தல் வரை இந்த தரவுகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் 5 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் தரவுகளை தவறாக பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள், நமது `ஃபேஸ்புக்` தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்ற விவாதத்தை எழுப்பி இருக்கிறது.



facebookபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சரி... ஃபேஸ்புக்கில் நமது தகவல்களை காப்பது எப்படி?
நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்?
நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்? நீங்கள் எந்த நடிகரை போல உள்ளீர்கள் என்பது போன்ற புதிர்கள் நமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வபோது தோன்றும். நாமும் அதில் ஆர்வமாக பங்கேற்போம். நமது தரவுகள் பெரும்பாலும் களவு போவது இங்கிருந்துதான்.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இது போன்ற ஒரு புதிர் போட்டியின் மூலமாகதான் ஏறத்தாழ 5 கோடி மக்களின் தரவுகளை அறுவடை செய்ததாக கூறப்படுகிறது.



S

இந்த புதிர் போட்டிகள் பயனாளிகளை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இது போன்ற புதிர்போட்டிகள்,'உங்களது தரவுகள் காக்கப்படும்` என்று உறுதி தரும். ஆனால், நம்மை அறியாமலே நாம் அவர்களுக்கு தரவுகள் கொடுத்து கொண்டிருப்போம்.
மூன்றாம் நபர் (third party), இதுபோல தரவுகளை எடுக்க முடியாத வண்ணம் ஃபேஸ்புக் இப்போது தமது சட்டத் திட்டங்களை மாற்றி உள்ளது.
எப்படி நமது தரவுகளை பாதுகாப்பது?
  • ஃபேஸ்புக்கை லாக் இன் செய்யுங்கள். ஆப் செட்டிங் பக்கத்தை பாருங்கள்.
  • பின், ஆப், வெப்சைட்ஸ் மற்றும் பிளகின் கீழ் இருக்கும் எடிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.



facebook

  • பின், disable பட்டனை கிளிக் செய்யுங்கள்.



facebook

இது மூன்றாவது நபர்கள் (Third Party) நமது தரவுகளை கையாள்வதை தடுக்கும்.
ஃபேஸ்புக்கை செயலிழக்க செய்தல்
ஃபேஸ்புக் நமக்கு அலுப்புத் தட்டினால், நாம் தற்காலிகமாக அதை சில காலம் செயலிழக்க செய்யல்லாம். அந்த வாய்ப்பை நமக்கு ஃபேஸ்புக் வழங்குகிறது. ஆனால், நம்மை குறித்த பல தகவல்கள் அப்படியேதான் இருக்கும்.
செய்யக் கூடாதவை:
  • பெரும்பாலும் பொருட்கள் விற்கும் நிறுவனங்களின் பக்கத்தை, 'லைக்' செய்வதை தவிருங்கள்.
  • நீங்கள் புதிர்போட்டி விளையாட விரும்பினால், ஃபேஸ்புக்கை `லாக் அவுட்` செய்வதை தவிருங்கள்.
இவை கிழக்கு ஆங்கிலியா சட்டப்பள்ளியின் பேராசிரியர் பால் பெர்னல் சொல்லும் வழிமுறைகள்.

Featured Posts

BLACKMART for get paid apps free